-கபிஷன்-
ஈழத்திருநாட்டில் கிழக்கு கரையோர எழில்மிகு அக்கரைப்பற்று பகுதியிலே அமர்ந்து அருளர்பாலித்துக்கொண்டிருக்கின்ற ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி பெருவிழா நிகழாண்டு மங்களம் நிறைந்த பிலவ வருடம் புரட்டாதித் திங்கள் 21ஆம் நாள் (2021.10.07) வியாழக்கிழமை பிரதமைத் நிதியும், சித்திரை நட்சத்திரமும், சித்தாமிர்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.00 மணிக்கு அன்னையின் திருக்கதவு திறக்கும் வைபவம் ஆரம்பமாகி தொடர்ந்து 09 நாட்கள் விழா இடம்பெற அம்மன் திருவருள் பாலித்துள்ளார்.
நிகழ்வுகளாக,
2021.10.07ம் திகதி வியாழக்கிழமை காலை 06.00 மணிக்கு அம்மனின் திருக்கதவு திறத்தலும், 2021.10.07ம் திகதி தொடக்கம் 2021.10.10ம் திகதி வரை விஷேட நித்திய பூசைகளும் இடம்பெறும்.
2021.10.11ம் திகதி திங்கட்கிழமை பாற்குடபவனி காலை 09.00மணியளவில் இடம்பெறும்
2021.10.11ம் . 12ம் திகதிகளில் அம்மன் ஆயை உள்வீதி உலா வருதலும், பூசைகளும் இடம்பெறும்.
2021.10.13 திகதி புதன்கிழமை அம்மன் வெளி ஊர்வலம் பிற்பகல் 04.00மணியளவில் இடம்பெறும்.
2021.10.14ம் திகதி வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு நோர்ப்பு நெல் நேர்தனும், பி.ப.02.00 மணிக்கு சக்தி பூசையும் நோர்ப்பு கட்டுதலும் இரவு 10.00 மணிக்கு தீ முட்டும் வைபவமும் இடம் பெறும்.
2021.10.15ம் திகதி வெள்ளிக்கிழமை காலை விஷேட பூசை இடம் பெற்று 07.00 மணிக்கு அம்மனின் பக்தி ததும்பும் தீ மிதிப்பு வைபவமும் அருள் வாழி பூசைகளுடன் இனிதே நிறைவு பெறும்.
2021.10.22ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு எட்டாம் சடங்கு ஆரம்பமாகி இரவு பொங்கல் நிகழ்வுகளுடன் விஷேட ஆராதனைகள் இடம் பெற்று, மறுநாள் 23ம் திகதி சனிக்கிழமை 07.00 மணிக்கு தீக்குழிக்கு பால் வார்க்கும் வைபவத்துடன் அம்மனின் இவ்வாண்டுக்கான உற்சவம் யாவும் பூரண நிறைவு பெறும்.