Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு: அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் கவலை – அதிகாரிகள் தடுப்பதற்கான நடவடிக்கையில்….

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு: அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் கவலை – அதிகாரிகள் தடுப்பதற்கான நடவடிக்கையில்….

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு இடம்பெற்று வந்த நிலையில் அருகில் உள்ள குடியிருப்புக்கள் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என பிரதேச மக்கள் கவலை தெரிவித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

எங்கள் பகுதியில் காலம் காலமாக வெள்ள காலத்தில் நீர் வடிந்தோடும் குறித்த களப்பின் பெரும்பகுதி நிரப்பப்படுவதால் அருகில் உள்ள குடியிருப்புக்கள் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என தெரிவித்து இருந்த நிலையில்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் அவர்கள் உடனடியாக கவனம் செலுத்தியதுடன் குறித்த செயற்பாட்டினை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *