Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கால்நடை உரிமையாளர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு – Website of Alayadivembu
Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கால்நடை உரிமையாளர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கால்நடை உரிமையாளர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு

வி.சுகிர்தகுமார் 

  கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைவாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கால்நடை உரிமையாளர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி பி.ரி.நசீரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தெளிவூட்டல் கருத்தரங்கில் அக்கரைப்பற்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்குமார மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு எம் எஸ் பி விஜயதுங்க ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.

கால்நடைகள் வீதிகளில் அலைந்து திரிவதனால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கெதிராக எடுக்க வேண்டிய சட்டநடவடிக்கை தொடர்பிலும் விளக்கினர்.

ஆகவே கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை வீதிகளில் அலைய விடாமல் உரிய இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பில் அசண்டையீன்மாக இருக்கும் கால் நடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நீதிமன்ற அனுமதியுடன் கால்நடைகளை கால்நடைபாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பொலிசார் அறிவறுத்தல் வழங்கினர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *