மின் வழிகளில் பராமரிப்பு வேலை காரணமாக (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை நெசவாலை வீதி, ஆலையடிவேம்பு, கோளாவில், நாவற்காடு, வாச்சிக்குடா வரை உள்ள பகுதிகளில் அவசர திருத்த வேலை காரணமாக மின்சாரம் முற்றாகத் தடைபட்டு இருக்கும் என அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபை மின் அத்யட்சகர் மக்களுக்கு அறியத்தருகின்றார்.
மேலும் குறித்த பராமரிப்பு வேலைகள் குறிப்பட்ட நேரத்தினை விட முன்னராக முடிவடையும் போது உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.