சுவாட்டி அணியின் ஏற்பாட்டில் அமரர் இராமச்சந்திரன் தனேஸ் ஞாபகார்த்த கிண்ணமானது அணிக்கு 11 பேர் 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக 64 கழகங்களை இணைத்து கோட்டை கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது.
இந்த தொடரில் ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதி வரை முன்னேறி இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகத்துடன் பலப்பரீட்சை நடத்தி ஐந்தாவது சம்பியன் கிண்ணத்தையும் வெற்றி கொண்டது.
இந்த சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் அபாரமான பெறுபேற்றினை வெளிப்படுத்திய தினுஜன் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டதுடன் அத்தோடு தொடர் முழுவதும் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் பந்து வீசியமைக்காக தினுஜன் “சிறந்த பந்துவீச்சாளர்”விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தனது தலைமைத்துவம் மூலம் அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சிலும் கலக்கிய அணித்தலைவர் சுஜிதன் ”தொடராட்ட நாயகன்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, இறுதிப்போட்டியில் தனது துடுப்பு மூலம் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து இறுதிப்போட்டியின் “ஆட்டநாயகன்” விருதை தேவதர்சன் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.