Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மீண்டும் பலத்த மழை- கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மக்கள் மீன்பிடியில்!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மீண்டும் பலத்த மழை- கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மக்கள் மீன்பிடியில்!

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்துவரும் சந்தர்ப்பத்தில் மீனவர்களும் கிராம வாழ் மக்களும் கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை முதல் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் பலத்த மழை பெய்துவருவதுடன் தாழ் நிலப்பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனவர்களும் கிராமத்தில் உள்ளவர்களும் கிராமத்தில் தாழ் நிலப்பிரதேசங்களில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மீன் பிடியில் ஈடுபட்டுவருவதுடன் தங்களது தேவைக்கு மேலதிகமாக பிடிக்கப்படும் மீன்களை விற்பனை செய்தும் வருகின்றனர்.

இதேநேரம் பிரதான வீதிகளிலும் நீர் நிரம்பி வரும் நிலையில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களும் வாகன சாரதிகளும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *