Latest News
Home / இலங்கை / மண்ணெண்ணெயின் விலை சடுதியாக அதிகரிக்கப்படுகின்றது?

மண்ணெண்ணெயின் விலை சடுதியாக அதிகரிக்கப்படுகின்றது?

இந்த மாத இறுதிக்குள் மண்ணெண்ணெய் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இருப்பினும் அந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 283 ரூபாய் வரையிலான நட்டத்தைச் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.

அவ்வாறு நட்டம் ஏற்படுவதைத் தடுப்பதாக இருந்தால் மண்ணெண்ணெய்யின் விலையை லீற்றருக்கு 370 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *