Latest News
Home / தொழில்நுட்பம் / பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்

பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இரு டிஸ்ப்ளேக்களிலும் 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான அண்ட்ரோய்ட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இத்துடன் கூகுள் உருவாக்கிய டைட்டன் எம் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12.2 எம்.பி. கேமரா, 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புகைப்படங்களை அழகாக்கும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களில் மோஷன் சென்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் பிராஜக்ட் சோலி மூலம் இயங்குகிறது. இது ஸ்மார்ட்போன் அருகாமையில் நிகழும் அசைவுகளை கண்டறியும் திறன் கொண்டிருக்கிறது.

இது ஸ்மார்ட்போனினை கையில் எடுக்க முற்படும் போது பேஸ் அன்லாக் அம்சத்தை இயக்க தயார்படுத்தும். ஸ்மார்ட்போன் அருகாமையில் யாரும் இல்லையெனில் திரை ஓப் ஆகிவிடும்.

இரு ஸ்மார்ட்போன்களும் ஜஸ்ட் பிளாக், கிளியர்லி வைட் மற்றும் லமிட்டெட் எடிஷன் ஓ சோ ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் 64 ஜி.பி. வெர்ஷன் விலை 799 டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 145132) என்றும் 128 ஜி.பி. மாடல் விலை 899 டாலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 163296) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

பிக்சல் 4XL ஸ்மார்ட்போனின் 64 ஜி.பி. மாடல் விலை 899 டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 163296) என்றும் 128 ஜி.பி. மாடல் விலை 999 டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 181461) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் 24 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வருகிறது.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *