பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது கடைபிடிக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுநிரூபம் நாளை கல்விஅமைச்சினால் வெளியிடப்படவுள்ளது.
மாகாணக்கல்வி பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இச் சுற்றுநிரூபம் அனுப்பப்படவுள்ளது.
குறித்த வழிகாட்டல்களின் ஊடாக தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டிய நடவடிக்கைகளை பாடசாலை முறையாக முன்னெடுக்கவேண்டும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது முதல் வாரத்தில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து திடடமொன்றை வகுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த திட்டங்கள் வகுத்துக்கொள்ளும் முறை தொடர்பில் கல்விஅமைச்சினால் வெளியிடப்படவுள்ள சுற்றுநிரூபதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள், மாணவர்களுக்கான குடிநீர் வசதிகள் வகுப்பறையில் மாணவர்கள் அமரவேண்டிய முறை, வகுப்பறையில் இருக்கவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை, ஆகிய விடையங்கள்சுற்றுநிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.