Latest News
Home / இலங்கை / தூங்கிக் கொண்டிருந்தவரை தூக்கி வீசிய காட்டு யானை!

தூங்கிக் கொண்டிருந்தவரை தூக்கி வீசிய காட்டு யானை!

 தூங்கிக் கொண்டிருந்தவரை தூக்கி வீசிய காட்டு யானை!

கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கிரியாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (06) 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

முக்கிரியாவ பகுதியில் வயல் காவலுக்காக இரண்டு பேர் சென்று உயரமான குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த போது யானை உறங்கிக்கொண்டிருந்த நபரை இழுத்து வீசியதாகவும் மற்றையவர் தப்பிச் சென்றதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் சடலம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *