பாக்கிஸ்தானிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் வெளிநாட்டு தலைவர்களிற்கு வழங்குகின்ற பாதுகாப்பினை இலங்கை அணிக்கு வழங்குவதற்கு அந்தநாட்டு அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் மொகான் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களை அவர்கள் எங்களிற்கு வழங்கினார்கள் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்Nளூம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எங்கள் அறிக்கையை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நிறைவேற்று குழுவிற்கு வழங்குவோம் அவர்கள் அதனடிப்படையில் முடிவெடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.