வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நலன்சார் உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக சுவாட் நிறுவனமானது சுவிஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி உதவியுடன் புலம் பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதியினை வழங்கி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 156 குடும்பங்களுக்கான 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதியினை சுவாட் நிறுவனமானது இன்று(05) வழங்கி வைத்தது.
சுவாட் நிறுவனத்தின் தலைவர் வடிவேல் பரமசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் எம்.சுதாகரன் உள்ளிட்ட நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிவாரணப்பொதியினை வழங்கி வைத்தனர்.
நிவாரணம் பெற வருகை தந்த மக்கள் சமூக இடைவெளியை பேணியதுடன் பாதுகாப்பான முறையில் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.