Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் இணைப்பு குழாய்கள் தீக்கிரை!

ஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் இணைப்பு குழாய்கள் தீக்கிரை!

ஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் விநியோகத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட 21 நீர் இணைப்பு குழாய்கள் (PE pipe) இன்று (01) தீக்கிரையானது. இதேபோன்று அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் கடந்த மாதம் நீர் விநியோகம் மேற்கொள்வதற்காக சேமித்து வைக்கப்பட்ட பெறுமதிமிக்க நீர் இணைப்பு குழாய்கள் தீக்கிரையானதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் நண்பகல் 2.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் செயற்பாட்டினால் 21 நீர் இணைப்பு குழாய்கள் எரிந்து நாசமாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற முன்னாள் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் T.நவநீதராஜ் அவர்களின் நடவடிக்கையினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Check Also

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்….

      சிரமதான பணி அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *