ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.
இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (02.09.2020) 11ம் நாள் திருவிழாவின் காலை தீர்த்த உட்சவமும் மாலை கொடியிறக்கமும் உபயகாரர் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று. இரவு11.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது. இதனிடையே வர்த்தகர் தங்கவடிவேல் அவர்களினால் அன்னதானம் வழங்கிவைக்கப்பட்டது.
இன்றைய நாள் திருவிழா நிகழ்வுகளுக்கு நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பாக இடம்பெற்று இனிதே நிறைவடைந்தது.