அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சனிக்கிழமை அன்று (09.09.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியிருந்தது.
நேற்றய தினம் (10.09.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா மற்றும் முதலாம் நாள் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றதுடன்.
இன்றைய தினம் (11/09/2023) இரண்டாம் நாள் திருவிழாவான சங்காபிஷேக திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக பாற்குட பவனியானது ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக மஹா கணபதி ஆலயத்திலிருந்து ஸ்ரீ மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அடியவர்களினால் பாற்குடம் எடுத்து வரப்பட்டு எல்லாம் வல்ல எம்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்வுகள் இடம்பெற்றது.