அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (09.09.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.
இன்று (10.09.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திருமதி. பாக்கியவதி கோவிந்தசாமி குடும்பத்தினர் பங்களிப்புடன் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.