Latest News
Home / ஆலையடிவேம்பு / பிரதேச செயலாளர் தலைமையில் வெள்ளம் வடிந்தோட செய்யும் பொறிமுறைகள் தொடர்பில் இன்று ஆராய்வு….

பிரதேச செயலாளர் தலைமையில் வெள்ளம் வடிந்தோட செய்யும் பொறிமுறைகள் தொடர்பில் இன்று ஆராய்வு….

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்தமழை பெய்த நிலையில் இன்னும் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

இதனால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ்நிலங்கள் மூழ்கியுள்ள நிலையில்; வெள்ள நிலை கட்டுப்படுத்த வேண்டிய தேவைப்பாடும் உருவாகி வருகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரனின் ஒத்துழைப்போடு பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரதேசத்தில் உள்ள வெள்ளம் வடிந்தோடும் பல்வேறு வடிகான்கள் துப்பரவு செய்யும் பணிகள் பிரதேச சபை ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றன.

இதேநேரம் சின்னமுகத்துவார ஆற்றுமுகப்பிரதேசம் சில நாட்களுக்கு முன் அகழ்ந்துவிடப்பட்டள்ள நிலையில் வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்களை பார்வையிட்ட பிரதேச செயலாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள் அதனை வடிந்தோட செய்யும் பொறிமுறைகள் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *