கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தைமலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (22.07.2022) காலை இடம்பெற்றது.
கடந்த இரு வருடங்களாக கொவிட்-19 தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த பாத யாத்திரை இந்த வருடம் கதிர்காம பாத யாத்திரைக்கு பல யாத்திரிகள் சென்றும், செல்லவும் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் கதிர்காம பாத யாத்திரை செல்லும் அடியார்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் வேண்டுகோள் அறிவித்தல் முன்வைக்கப்பட்டுள்ளது.
கதிர்காம பாத யாத்திரிகளுக்கான அறிவிப்பு
01. கதிர்காம பாத யாத்திரிகர் ஒவ்வொருவர் காவிநிற ஆடையணிந்து சிவசின்னங்களைத் தரித்து யாத்திரைக்கு செல்லல்.
02. பாதயாத்திரிகர்கள் சூழலை மாசுபடுத்தும் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை முற்றாக தவிர்த்தல்.
தகவல்: ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற செயலாளர் தேசமணி மணிவண்ணன்(JP).