இங்கிலாந்து கிரிக்கட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆதர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றுப்பயணம் கடந்த பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கைவிடப்பட்டது.
இதன் பின்னர் இலங்கை கிரிக்கட் அணி எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
அது மாத்திரமன்றி இந்திய, தென்னாபிரிக்க மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சுற்றுப்பயணங்களும் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.