Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான மற்றுமொரு ATM (தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம்) விரைவில் மக்கள் பயன்பாட்டுக்காக…..

ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான மற்றுமொரு ATM (தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம்) விரைவில் மக்கள் பயன்பாட்டுக்காக…..

-கிரிசாந் மகாதேவன்-

அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) காணப்பட்டுவந்த நிலையில்.

தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிறுவிட வேண்டும் என பிரதேச மக்களின் பலரது கூட்டு முயற்ச்சியில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு அதன் விளைவாக கடந்த மாதம் மக்களின் பயன்பாட்டுக்காக ஆலையடிவேம்பு மக்கள் வங்கி உப கிளைக்கான தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) திறந்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மற்றுமொரு தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) விரைவில் நிறுவப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட இருக்கின்றது.

இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட இருக்கும் BOC – ATM இயந்திரம் மக்கள் பயன்பெரும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் அமைய இருக்கின்றது.

குறித்த (ATM) பொருத்தும் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது பிரதேச மக்கள் மத்தியில் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளதுடன் மேலும் இது கிடைக்கப்பெற உறுதுணையாக இருந்த பிரதேச தன்னார்வம் கொண்ட செயற்பாட்டாளர்கள் , இதற்கான முயற்சி மற்றும் இடத்தை வழங்கிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், நடவடிக்கையினை முன்னெடுத்த அக்கரைப்பற்று இலங்கை வங்கியின் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் என அனைவருக்கும் நன்றிகளை பிரதேச மக்கள் தெரிவித்துக்கொள்கின்றனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *