Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச உதயம் விளையாட்டு கழகத்தின் மரம் நடுகை நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச உதயம் விளையாட்டு கழகத்தின் மரம் நடுகை நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச உதயம் விளையாட்டு கழகத்தின் மரம் நடுகை நிகழ்வு நேற்று (03.07.2022) காலை 10.00 மணியளவில் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் சிறந்த முறையில் இடம்பெற்றது.

மேலும் உதயம் விளையாட்டு கழக கிரிக்கெட் அணி வீரர்களுக்குள் பயிற்சி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெற்று வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணம் என்பனவும் அதிதிகளால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வி.பபாகரன், ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன்ஆலய தலைவர் ஜெகநாதன், திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் அதிபர் சு.ஸ்டீபன்சன், பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் என பலரும் குறித்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *