Latest News
Home / ஆலையடிவேம்பு (page 41)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வீதிகளில் தேங்கிய வெள்ள நீர்: ஆலையடிவேம்பு பிரதேச சபையினரினால் வெள்ள நீரானது அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு….

-கிரிசாந்- வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி இருந்த நிலையில். இன்றைய (25) தினம் நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (25) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ள நீரானது வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கியமையால் மக்களுக்கு பெரும் அசௌகரியமான நிலை ஏற்பட்டது. இதனை நிவர்த்தி …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச அளிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச அலிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று (23) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் G.சுகுணன் தலைமையில்  திறந்து வைக்கப்பட்டது. அலிக்கம்பை பிரதேச மக்களின் நீண்ட நாள் வைத்திய தேவை தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பலனாக குறித்த ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு பலரும் அதிதிகளாக கலந்து …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு மக்கள் வங்கி உப கிளைக்கான ATM இயந்திரம் பொருத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்.

-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்பட்டுவந்த நிலையில். தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிறுவிட வேண்டும் என பிரதேச மக்களின் பலரது கூட்டு முயற்ச்சி காரணமாக தற்போது ஆலையடிவேம்பு மக்கள் வங்கி உப கிளைக்கான தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) பொருத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை …

மேலும் வாசிக்க

அகில இலங்கை ரீதியில் அக்கரைப்பற்று கமு /திகோ/ ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை சிறந்த பாடசாலையாக தெரிவு…

-காந்தன்- தேசிய அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனதினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட ” விஞ்ஞானத்தின் ஊடாக உலகைப் புரிந்து கொள்ளல்” எனும் தொனியில் நடைபெற்ற போட்டியில் அதிகளவு மாணவர்கள் பங்கு பற்றிய பெருமைக்குரிய பாடசாலையாக THE BEST SCHOOL AWARD FOR BEST PERFORMANCE IN THE COMPETITION-2021 என்ற பெருமை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு கிடைத்துள்ளது. இப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை தரம்-8 …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று திகோ/திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கான பெயர் பலகை ”சத்தியம்” அமைப்பின் அனுசரணையில் நிறுவப்பட்டு வருவதுடன்: விரைவில் அங்குரார்ப்பண நிகழ்வு….

-கிரிசாந் மகாதேவன்- திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திகோ/திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கான பெயர் பலகை நிறுவப்பட்டு பாடசாலையின் பௌதீக சூழல் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. குறித்த பயனுள்ள செயற்பாடானது சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பின் அனுசரணையில் பாடசாலை அதிபர் தங்கேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பெயர் பலகை நிறுவப்பட்டு அழகுபடுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. “சத்தியம் “ (லண்டன்) வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச பல …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை 2000 ஆம் வருட A/L மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் திறப்பு விழா…

2000 ஆம் வருட A/L மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் (19) இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாணவர்களின் பாவணைக்காக கையளிக்கும் நிகழ்வு 2000 ஆம் வருட உயர்தர பழைய மாணவர் சங்க தலைவர் திரு. யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.யோ.ஜெயசந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிகாரி திருமதி எம்.மயூரன், கமு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச வீடுகள் மற்றும் ஆலயங்களில் கார்த்திகை தீப வழிபாடுகள்….

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதுடன் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா (18. 11. 2021) இன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச ஒரு சில ஆலயங்களில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு….

-காந்தன்- திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று 2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17) புதன்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கௌரவிப்பு நிகழ்வில் 2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதந்ததுடன் பாடசாலையின் அதிபர், பிரதி …

மேலும் வாசிக்க

31 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம்…

“பூரணத்துவமான மனித சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்’ “நித்தமும் புத்தறிவினைப் படைப்போரும் ஆசிரியர்களே’ என்பதற்கிணங்க அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம் அவர்கள் 31 வருட ஆசிரியர் சேவையில் இருந்து இன்றைய தினம் (15) ஒய்வு பெறுகிறார். ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம் அவர்கள் (1990/10/15) ம் திகதி திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான பட்டாதாரி ஆசிரியராக கடமையேற்று சிறந்த முறையில் கடமையாற்றி …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தல் நடவடிக்கை: விரைவில் அங்குரார்ப்பண நிகழ்வு….

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் முன் பிரதான வீதியின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. சமூக அக்கறைகொண்ட நிதி அனுசரணையாளர்கள் பலரின் பங்களிப்புடனும் பாடசாலை அதிபர் மு.சண்டேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் ஓவியர்கள் S.மகேசன் மற்றும் T.சந்திரகுமார் அவர்களினால் பாடசாலை மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சுவரோவியங்கள் வரையும் பணிகள் மிக விரைவில் நிறைவடைந்து …

மேலும் வாசிக்க