Latest News
Home / ஆலையடிவேம்பு / புளியம்பத்தை பிள்ளைகளுக்கான மகா சக்தி பாலர் பாடசாலை நாளை (26) மீள் ஆரம்பம்….

புளியம்பத்தை பிள்ளைகளுக்கான மகா சக்தி பாலர் பாடசாலை நாளை (26) மீள் ஆரம்பம்….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராம பிள்ளைகளுக்கான மகா சக்தி பாலர் பாடசாலை நாளை (26.09.2022) திங்கட்கிழமை புதுப்பொலிவுடன் மீள் ஆரம்பமாகின்றது.

குறித்த செயற்பாடு 1976 நண்பர்கள் குழாமின் வேண்டுதலுக்கு அமைவாக இணைந்த கரங்கள் உறவுகளின் பூரண பங்களிப்புடன் பாலர் பாடசாலையானது ஆரம்பமாகின்றது.

புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் என புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை கடந்த மே மாதம்  உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறாக இருக்கின்ற நிலையில் குறித்த புளியம்பத்தைக் கிராம பிரதேசத்திற்கு பாலர் பாடசாலை ஒன்று மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

 

குறித்த பாலர் பாடசாலை மீள் ஆரம்பத்திற்கு இணைந்த கரங்கள் உறவுகளின் அமைப்பு பல பங்களிப்புகளை வழங்கிவருகின்றார்கள்.

01. சுவருக்கான வர்ணப் பூச்சு.
02. 6 cube மண்.
03. குறிப்பிட்ட மாதத்துக்கான ஆசியர் வேதனம்.
04. பாலர் பாடசாலை மற்றும் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு
05. பாலர் பாடசாலை தளபாடங்கள்.
06. கற்றல் உபகரணங்கள்.
07. இன்னும் சில அவசிய தேவைகளையும் பூர்த்தி செய்துதர முன்வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *