கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டு பிராத்தனை சபையின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு அமைப்பின் நிர்வாகத்தினர் தலைமையில் சிறந்த முறையில் நேற்றய தினம் (08) இடம்பெற்றது.
இன் நிகழ்வில் தெரிவு செய்யப்பட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இன் நிகழ்வின் அதிதிகளாக கௌரவ பா.உ தவராசா கலையரசன், கௌரவ முன்னாள் பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் ஊர் பிரமுகர்கள் என்பவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.
மேலும் நிகழ்வில் கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டு பிராத்தனை சபையின் உறுப்பினர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பிரதேச மக்கள் என்பவர்கள் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.