Latest News
Home / ஆலையடிவேம்பு / சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறி பாலர் பாடசாலையின் பொங்கல் விழா இன்று (09) சிறப்பான முறையில்…..

சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறி பாலர் பாடசாலையின் பொங்கல் விழா இன்று (09) சிறப்பான முறையில்…..

மகாசக்தி சின்னப் பனங்காடு கூட்டுறவு சங்கத்தினால் நடாத்தப்பட்டுவரும் சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி பாலர் பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வானது (09.02.2022) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

இவ் பொங்கல் விழா நிகழ்வானது சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி பாலர் பாடசாலையின் ஆசிரியை பே. கஜனியா மற்றும் மாணவர்களின் பெற்றோர்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் குறித்த நிகழ்வுகள் சிறந்த முறையில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு மகாசக்தி அமைப்பின் தலைவி பி.மங்கையர்க்கரசி, செயலாளர் திரு. ச.திலகராஜன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், கணக்காய்வாளர் திரு. இ. பவப்பிரகாசன், தலைமைக் காரியாலய பணியாளர்களான திருமதி. யோ. நிரஞ்சலா (உதவி நிதியுதவியாளர்) , திருமதி. ப.சாந்தி (காசாளர்) , திருமதி.செ. வரலெட்சுமி ( எழு வினைஞர்), திருமதி.க. பிரியானி (கணனி தொழில்நுட்ப உத்தியோகத்தர்) மற்றும் திரு. பாக்கியராசா அவர்களும் கலந்து நிகழ்வினை சிறப்பித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *