Latest News
Home / இலங்கை / தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலைய செயற்பாடுகளில் மாற்றம்!

தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலைய செயற்பாடுகளில் மாற்றம்!

நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கும் கால எல்லை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரின் சளி மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து 10 நாட்களுக்கு இவ்வாறு கணக்கிடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், தொற்றாளர்களில் சிலர் 6 நாட்களின் பின்னரே தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் அவர்கள் 04 நாட்கள் மாத்திரமே தடுத்து வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தொற்றாளரிடம் இருந்து வைரஸ் பரவக்கூடும் என நம்பப்படும் 10 நாட்கள் மாத்திரம் அவர்களை சிகிச்சை மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கவும், மீதி 4 நாட்களுக்கு அவர்களை வீட்டினுள் தனிமைப்படுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *