Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வு….

ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வு….

R. அபிராஜ்

ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று காலை 08.00 மணியளவில்  சிறுவர்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று சிறார்களுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெறுவது விசேடமானது. இந்த விசேட தினத்தில் இந்துக்கள் தமது குழந்தைகளுக்கு எழுத்தறிவினை சம்பிரதாய பூர்வமாக புகட்டுவது ஏடு தொடக்குதல் எனப்படுகிறது.

ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் மற்றும் ஏனைய கல்விக்கூடங்களிலும் இவ் ஏடு தொடக்கும் வைபவமானது சிறப்புற நடைபெறும்.

அந்த வகையில் இந் நிகழ்வில் சிறுவர்களுக்கு அகரம் தொடக்கி உயிர் , மெய் எழுத்துக்கள் என்பன கற்றுக் கொடுக்கப்படுவதோடு பச்சரிசியில் எழுதவும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

அத்துடன், குறித்த ஏடு தொடங்குதல் நிகழ்வு தற்கால சூழ்நிலைக்கமைய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *