Latest News
Home / ஆலையடிவேம்பு / பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்…

பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்…

வி.சுகிர்தகுமார்  

அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி இன்றுமுதல் பிரதேச செயலகங்களில் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேநேரம் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா   சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் பயிற்சி நெறியினை முன்கொண்டு சென்றனர்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாயவின் எண்ணக்கருவிற்கமைய தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிபளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான பயிற்சி நெறிகளும் தலைமைத்துவ பயிற்சிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *