Latest News
Home / உலகம் / பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் இரு விண்கற்கள்

பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் இரு விண்கற்கள்

இரு விண்கற்கள் நேற்றும் (04) இன்றும் (05) பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

2020 கே என் 5 என பெயரிடப்பட்ட விண்கல் 24 தொடக்கம் 52 மீற்றர் வரை விட்டமுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் அதாவது சுமார் 62 இலட்சம் கிலோமீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 12 முதல் 24 மீற்றர் நீளமுடைய 2020 கே ஏ 6 என்ற மற்றோரு விண்கல் பூமியை நெருங்கியபடி செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் இன்றும் (05) நாளையும் (06) பூமிக்கு மிக அருகில் வந்து செல்லும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *