பைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கட்டார் பொது சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது.
அத்துடன் தடுப்பு மருந்துகளின் முதலாவது தொகுதியை இன்று (திங்கள்கிழமை) கட்டார் பெறும் என மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சின் அறிக்கையில், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட தகுதி பெறுவார்கள் என்று கூறியுள்ளது.
இதேவேளை, கட்டார் தனது தடுப்பூசியை வாங்க அமெரிக்க மருந்து நிறுவனமான மொடர்னா இன்க் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.
சக வளைகுடா அரபு நாடான ஓமான் தனது முதல் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி ஏற்றுமதியை புதன்கிழமை பெறும் என்று சுகாதார அமைச்சின் அதிகாரி தெரிவித்தார். ஆரம்ப கட்டமானது 20 சதவீத மக்களை உள்ளடக்கும்.
ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியை மக்களுக்கு போடத் தொடங்கிய முதல் அரபு நாடு என்ற பெருமையை கடந்த வாரம் சவுதி அரேபியா பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.