Latest News
Home / உலகம் / உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் ஈரான்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் ஈரான்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதிக்க ஆரம்பித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஒருவார காலத்தில் 15 இலட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கும் இயலுமை தங்களிடம் காணப்படுவதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கத் தடைகள் காரணமாக போதுமான அளவு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் நாடு தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது.

மேலும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் தடுப்பூசியை பரிசோதிக்க முன்வந்ததாகவும், முதல் கட்ட மனித சோதனைகளில் பங்கேற்க 56 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடான ஈரானில் இதுவரை 12 இலட்சம் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்தோடு 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *