Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் சிரமதான பணி – ஏனைய சமூக அமைப்புக்களுக்கும் அழைப்பு…

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் சிரமதான பணி – ஏனைய சமூக அமைப்புக்களுக்கும் அழைப்பு…

ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தின் திருக்கதவு திறக்கவிருப்பதனால் ஆலயபரிபாலனசபையினரால் ஆலயத்தில் பல முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (02.10.2020) காலை 06.00 மணி முதல் காலை 09.00 மணி வரை ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் மாபெரும் சிரமதான பணிகள் இடம்பெற முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் சிரமதான பணிகளுக்கு ஏனைய சமூக அமைப்புக்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள்அனைவரும் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்புக்களை வழங்குமாறும் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் அழைப்புவிடுத்துள்ளார்கள்.

இவ் சிரமதான பணியில் இணைந்து கொள்ளவிரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *