வை.ஜினுஜன்
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக கிழக்கிலும் மாழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இதனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய அடைமழை பேய்ந்துள்ளது.
இதன் போது கடும் காற்று வீசியதனால் மக்கள் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்கள் காற்றினால் நாசமாக்கப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பில் தற்போது நெற்பயிச்செய்கை அறுவடை செய்யப்படுகின்ற நேரத்தில், இவ்வாறு நிலவும் காலநிலை மாற்றத்தினால் நெற்பயிச்செய்கை அறுவடை செய்வதும் அதை பதப்படுத்துவதும் சிரமமாக உள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.