UPDATE 02: நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 429ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், இதுவரை மூவாயிரத்து 714 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், இன்னும் மூவாயிரத்து 700 பேர் தற்போது நாடு முழுவதுமுள்ள 23 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
UPDATE 01: நாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் பேலியகொட மீன் சந்தைத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 140 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது,
அத்துடன், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள 37 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 354ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், இதுவரை மூவாயிரத்து 714 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், இன்னும் மூவாயிரத்து 625 பேர் தற்போது நாடு முழுவதுமுள்ள 23 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி 15 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.