சுவாரசியம் – Website of Alayadivembu https://alayadivembuweb.lk Alayadivembuweb | ஆலையடிவேம்பு வெப் Tue, 09 May 2023 15:51:07 +0000 en-GB hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://alayadivembuweb.lk/wp-content/uploads/2022/11/cropped-FINAL-LOGO-WEB-1-32x32.jpg சுவாரசியம் – Website of Alayadivembu https://alayadivembuweb.lk 32 32 இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்! https://alayadivembuweb.lk/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-3/ https://alayadivembuweb.lk/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-3/#respond Tue, 09 May 2023 15:51:07 +0000 http://alayadivembuweb.lk/?p=33885 இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் துபாயிக்கு …

The post இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்! appeared first on Website of Alayadivembu.

]]>

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் துபாயிக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும், இந்த கல்லை விற்பனை செய்துக்கொள்ள முடியாது நிலைமை காரணமாக, குறித்த மாணிக்கக்கல் மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

The post இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்! appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-3/feed/ 0
அதிகமாக coffee அருந்துவதால் இதயநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம் https://alayadivembuweb.lk/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-coffee-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4/ https://alayadivembuweb.lk/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-coffee-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4/#respond Mon, 26 Dec 2022 15:01:45 +0000 http://alayadivembuweb.lk/?p=32376 தினந்தோறும் இரண்டு கப் coffee அருந்துவது, இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கடுமையான உயர் ரத்த அழுத்தம் அதாவது 160/100 mmHg அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் coffee அருந்துவதால், இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு coffeeயின் நேர்மறையான விளைவுகள் பொருந்துமா? …

The post அதிகமாக coffee அருந்துவதால் இதயநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம் appeared first on Website of Alayadivembu.

]]>

தினந்தோறும் இரண்டு கப் coffee அருந்துவது, இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கடுமையான உயர் ரத்த அழுத்தம் அதாவது 160/100 mmHg அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் coffee அருந்துவதால், இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு coffeeயின் நேர்மறையான விளைவுகள் பொருந்துமா? அவர்கள் மீது கிரீன் டீயின் தாக்கம் என்ன? என்று தெளிவுப்படுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஜப்பானில் உள்ள தேசிய சுகாதார மருத்துவ மையத்தின் இயக்குனர் ஹிரோயாசு ஐசோ தனது ஆய்வில் விளக்கினார்.

The post அதிகமாக coffee அருந்துவதால் இதயநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம் appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-coffee-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4/feed/ 0
டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிப்பு https://alayadivembuweb.lk/%e0%ae%9f%e0%af%88%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://alayadivembuweb.lk/%e0%ae%9f%e0%af%88%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Wed, 21 Sep 2022 14:26:39 +0000 http://alayadivembuweb.lk/?p=31073 வட மேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் டைனோசர்களின் காலத்துக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள் இவை என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற ஜெல்லிமீன்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

The post டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிப்பு appeared first on Website of Alayadivembu.

]]>

வட மேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியில் டைனோசர்களின் காலத்துக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள் இவை என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற ஜெல்லிமீன்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

The post டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிப்பு appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%9f%e0%af%88%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0
உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள் https://alayadivembuweb.lk/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://alayadivembuweb.lk/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Mon, 23 May 2022 03:31:10 +0000 http://alayadivembuweb.lk/?p=29836 வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே குறிக்கின்றன. இந்த வார்த்தைகளின் மூல ஆரம்பத்தை தேடிப்பார்த்தால் இந்த வார்த்தை “உடைக்க முடியாதது” என்ற பொருளில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. இதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வைரங்கள் நகைகளில் பயன்படுத்தத் தொடங்கின. இன்று நாம் உலகின் மிகப் பிரபலமான சில வைரங்களைப் பற்றி பேசப் போகிறோம். கோஹினூர் டயமண்ட் கோஹினூர் வைரத்தின் கடந்த காலத்தைப் பற்றி …

The post உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள் appeared first on Website of Alayadivembu.

]]>

வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே குறிக்கின்றன. இந்த வார்த்தைகளின் மூல ஆரம்பத்தை தேடிப்பார்த்தால் இந்த வார்த்தை “உடைக்க முடியாதது” என்ற பொருளில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. இதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வைரங்கள் நகைகளில் பயன்படுத்தத் தொடங்கின. இன்று நாம் உலகின் மிகப் பிரபலமான சில வைரங்களைப் பற்றி பேசப் போகிறோம்.

கோஹினூர் டயமண்ட்

கோஹினூர் வைரத்தின் கடந்த காலத்தைப் பற்றி பல அற்புதமான புனைக் கதைகள் உள்ளன. ஆனால் இந்த புராணங்களின் முடிவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மயில் சிம்மாசனத்தை அழகுபடுத்த இந்த வைரம் பயன்படுத்தப்பட்டதென கூறப்படுகிறது. பின்னர் இந்த வைரம் பஞ்சாப் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆங்கிலேயர்கள் பஞ்சாப் மீது படையெடுத்து அரண்மனையை சூறையாடிய பின்னர் கோஹினூர் வைரம் லண்டனுக்கு அனுப்பப்பட்டது. விக்டோரியா மகாராணி இந்த வைரத்தை ஒரு வளையலில் பயன்படுத்தினாலும் பின்னர் வந்த இங்கிலாந்து ராணிகளான அலெக்ஸாண்ட்ரா, மேரி மற்றும் எலிசபெத் ஆகியோரால் அவரது கிரீடங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த வைரத்தை வாரிசாகக் கொண்டுள்ளன. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைகளையும் கடுமையாக நிராகரிக்கிறது.

கல்லினன் டயமண்ட்

தென்னாபிரிக்காவின் கலினன் வைர சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரத்தை பிரிட்டனின் மன்னர் VII ஆம் எட்வர்ட்க்கு பரிசாக வழங்கினர். இது அந்த காலக்கட்டத்தில் உலகின் மிகப்பெரிய வைரமாக இருந்தது. பின்னர் ஒன்பது சிறிய வைரங்களாக பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரால் பல்வேறு நகைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மிகப்பெரிய பகுதி, தி ஸ்டார் ஆஃப் ஆபிரிக்கா என அழைக்கப்படுகிறது. இது பிரிட்டிஷ் முடியாட்சியின் அடையாளங்களில் ஒன்றான செங்கோலின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் இது இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் என்று அழைக்கப்படும் கிரீடத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

எக்செல்சியர் டயமண்ட்

கலினன் வைரத்தைக் கண்டுபிடிக்கும் வரை எக்செல்சியர் வைரமானது உலகின் மிகப் பெரிய வைரம் என்ற பெருமையைப் பெற்றது. இது தென்னாப்பிரிக்காவிள் கண்டெடுக்கப்பட்டது. வைரம் பின்னர் ஆம்ஸ்டர்டாமிற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு அது சிறிய வைரங்களாக வெட்டப்பட்டது. சில நகை நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வைரத்தை துண்டுகளாக வெட்டுவது வைரங்களின் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான அத்தியாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பங்குகள் உலகெங்கிலும் உள்ள வாங்குபவர்களால் வாங்கப்பட்டன, தற்போது அவை யாருடையது என்பது குறித்து திட்டவட்டமான ஒப்பந்தம் இல்லை.

ஆர்லோவ் டயமண்ட்

பேரரசர் கேதரின் தி கிரேட் ஒஃப் ரஷ்யாவின் செங்கோலுடன் இணைக்கப்பட்ட இந்த வைரம் இப்போது கிரெம்ளின் டயமண்ட் டிரஸ்டின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் இந்தியாவில் தி கிரேட் மொகுல் டயமண்ட் என்றும் அழைக்கப்பட்டது என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் வைரத்தைச் சுற்றியுள்ள மற்றொரு புராணத்தின் படி, கர்நாடகப் போரில் பங்கேற்ற பிரெஞ்சு சிப்பாய் ஒருவர் இந்துவாக மாறுவேடமிட்டு கோயிலில் வழிபடப்பட்ட ஒரு சிலையின் கண்ணிலிருந்து இந்த வைரத்தைத் திருடியதாகவும் கூறப்படுகிறது. இது விற்கப்பட்ட பிறகு, அது பேரரசி கேத்தரினுக்கு சொத்தாக மாறியது.

ஐடலின் கண் வைரம் (Idol’s Eye Diamond)

இந்த சூப்பரான வைரத்தை சுற்றி பல்வேறு புராணக்கதைகள் உள்ளன. இந்து தெய்வமொன்றின் கண்ணாக ஆரம்ப காலத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. பேரரசர் இரண்டாவது அப்துல் ஹமீத் ஒட்டோமான் அதை ஒரு நகையாக அணியத் தொடங்கியபோது ஐரோப்பாவுக்கு இந்த வைரத்தைப் பற்றி முதலில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்ட பின்னர், இந்த வைரத்திற்கு என்ன ஆனதென பலர் ஆராய்ச்சி செய்தனர். இறுதியாக இது நியூயோர்க் நகரில் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வைரத்தை பிலிப்பைன்ஸின் சர்வாதிகாரி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் வாங்கியதாக சிலர் சந்தேகிக்கின்றனர்.

ரீஜண்ட் டயமண்ட்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரத்தை XV ஆம் லூயிஸ்ன் இளைய பருவ பாதுகாவலரான பிரான்ஸை ஆட்சி செய்த இரண்டாம் பிலிப், டியூக் ஒஃப் ஆர்லியன்ஸ் வாங்கினார். இது பின்னர் முறையே லூயிஸ் XV மற்றும் XVI இன் முடிசூட்டுக்கு பயன்படுத்தப்படும் கிரீடங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டது. ராணி மேரி அன்டோனெட் இந்த வைரத்தை தனது தலைக்கவசத்தில் அணிய முடிவு செய்தார். நெப்போலியன் போனபார்ட் இந்த வைரத்தை தனது வாளை அலங்கரிக்க பயன்படுத்தினார். மேலும் அவரது வீழ்ச்சிக்குப் பிறகு வந்த கிட்டத்தட்ட அனைத்து பிரெஞ்சு மன்னர்களும் தங்கள் கிரீடங்களை அலங்கரிக்க அதைப் பயன்படுத்தினர். இன்று இந்த வைரத்தை லூவ்ரே அரண்மனையில் காணலாம்.

ஹோப் டயமண்ட்

ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் இந்த வைரத்தை கட்டுப்படுத்துகின்றது. இது உலகின் மிகவும் பிரபலமான வைரங்களில் ஒன்றாகும். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த வைரம், பிரெஞ்சு அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து, பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் பிரிட்டனுக்கும், இறுதியில் அமெரிக்காவிற்கும் உரிமையின் மாற்றத்தின் அடிப்படையில் விநியோகிக்கப்பட்ட ஒரு வைரமாக அறியப்படுகிறது. இது உரிமையாளர்களுக்கு துரதிஷ்டத்தைத் தருகிறது என்றும் இதன் விளைவாக ஸ்மித்சோனியன் நிறுவனத்திற்கு அதன் இறுதி அறங்காவலர்கள் நன்கொடை அளித்தனர்.

The post உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள் appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் : இன்னும் அதிக குழந்தைகள் பெற ஆசையாம்!! https://alayadivembuweb.lk/103-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3/ https://alayadivembuweb.lk/103-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3/#respond Sun, 08 May 2022 13:59:30 +0000 http://alayadivembuweb.lk/?p=29502 ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். Hajji Mukheilif Farhoud Al-Mansouri என்ற நபர் கடந்த 1919ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவருக்கு 103 வயதாகிறது. இவருக்கு 2 மனைவிகள் மூலம் 15 குழந்தைகள் மற்றும் நூறுக்கும் அதிகமான பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் உள்ளனர். இந்த நிலையில் 37 வயதான பெண்ணை சமீபத்தில் Hajji மூன்றாம் …

The post 103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் : இன்னும் அதிக குழந்தைகள் பெற ஆசையாம்!! appeared first on Website of Alayadivembu.

]]>

ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Hajji Mukheilif Farhoud Al-Mansouri என்ற நபர் கடந்த 1919ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவருக்கு 103 வயதாகிறது. இவருக்கு 2 மனைவிகள் மூலம் 15 குழந்தைகள் மற்றும் நூறுக்கும் அதிகமான பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் உள்ளனர்.

இந்த நிலையில் 37 வயதான பெண்ணை சமீபத்தில் Hajji மூன்றாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் மகன் அப்துல் சல்மான் கூறுகையில், எங்கள் தாயார் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து எங்கள் தந்தை Hajjiக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டாவது மனைவி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர் திரும்ப வருவாரா என சில மாதங்கள் Hajji காத்திருந்த நிலையில் அவர் வராததால் 37 வயதான பெண்ணை மூன்றாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எங்களிடம் மூன்றாம் திருமணம் செய்து கொண்டு மேலும் பல குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அவர் கூறியதையடுத்தே பெண் பார்த்தோம் என கூறியுள்ளார்.

Hajji மற்றும் அவர் குடும்பத்தார் திருமணம் செய்துகொண்டு அதிக குழந்தைகளைப் பெற பயப்படக்கூடாது என்ற விடயத்தை ஆணித்தரமாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது.

The post 103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் : இன்னும் அதிக குழந்தைகள் பெற ஆசையாம்!! appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/103-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3/feed/ 0
பலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!! https://alayadivembuweb.lk/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87/ https://alayadivembuweb.lk/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87/#respond Thu, 14 Apr 2022 14:47:24 +0000 http://alayadivembuweb.lk/?p=29053 சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது. ராணு மோண்டல், கச்சா பதம் பாடகர் என பலர் குறித்த வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, ஒரே நாளில் அவரை வேற லெவலில் பிரபலம் ஆக்கியிருந்தது. அந்த வகையில், சிலர் கேமராவில் சிக்கி, பிரபலம் ஆவதும் உண்டு. உதாரணத்திற்கு, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டீ வியாபாரியாக …

The post பலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!! appeared first on Website of Alayadivembu.

]]>

சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது.

ராணு மோண்டல், கச்சா பதம் பாடகர் என பலர் குறித்த வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, ஒரே நாளில் அவரை வேற லெவலில் பிரபலம் ஆக்கியிருந்தது. அந்த வகையில், சிலர் கேமராவில் சிக்கி, பிரபலம் ஆவதும் உண்டு.

உதாரணத்திற்கு, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டீ வியாபாரியாக இருந்த இளைஞர் ஒருவரின் புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி அவரை அதிகம் புகழ் பெறச் செய்திருந்தது.

சமீபத்தில் கூட, கேரளாவைச் சேர்ந்த வயதான கூலித் தொழிலாளி ஒருவரை மொத்தமாக மாற்றி, கோட் சூட்டுடன் ஸ்டைலாக எடுத்த போட்டோஷூட்களும் அதிகம் இணையத்தில் லைக்குகளை அள்ளி இருந்தது. அந்த வகையில், தற்போது இளம்பெண் ஒருவரின் ‘Transformation’, பயங்கரமாக ஹிட்டடித்து வருகிறது.

கேரளாவில் அதிகம் ஆட்கள் கூடும் இடங்களில் இளம்பெண் ஒருவர் பலூன் விற்று வந்துள்ளார். இவரின் புகைப்படத்தினை அர்ஜுன் கிருஷ்ணன் என்ற புகைப்பட கலைஞர், அண்டலூர் காவு திருவிழாவின் போது கேரளாவில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

மேலும், இந்த புகைப்படத்தினை அந்த இளம்பெண் மற்றும் அவரது தயாரிடமும் அர்ஜுன் காட்டியுள்ளார். இதனைக் கண்ட இருவரும் அதிகம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிஸ்பு என்ற அந்த பெண், ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கேரளாவில் பலூன் வியாபாரியாக இருந்து வருகிறார். இவரின் புகைப்படத்தை, அர்ஜுன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததும், இதற்கான வரவேற்பு, அமோகமாக இருந்தது. அவரது நண்பர் ஷ்ரேயாஸ் என்பவரும், கிஸ்புவை புகைப்படம் எடுத்துள்ளார்.

இதற்கும் வரவேற்பு பல மடங்கு அதிகமானதால், கிஸ்புவை வைத்து தனியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்த திட்டம் போட்டுள்ளனர். அதன்படி, கிஸ்புவின் குடும்பத்தில் பேசி, இதற்கு சம்மதமும் வாங்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ரம்யா என்ற ஸ்டைலிஸ்ட் ஒருவருடன் இணைந்து, மொத்தமாக கிஸ்புவை மாடர்னாக மாற்றியுள்ளனர். அது மட்டுமில்லாமல், கேரளா ஸ்டைலில் கசவு புடவை அணிந்து, ஒரு கேரளா பெண்ணாகவும் மாறியுள்ளார் கிஸ்பு.

இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு அவரை ஒரு மலையாளி பெண் போலவே உணர வைக்கிறது. பலூன் வியாபாரியாக இருந்த பெண்ணின் ‘Makeover’ புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

The post பலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!! appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87/feed/ 0
வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!! https://alayadivembuweb.lk/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%ae/ https://alayadivembuweb.lk/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%ae/#respond Tue, 08 Feb 2022 14:05:48 +0000 http://alayadivembuweb.lk/?p=27929 இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மீன் வலையில் 121 Telia Bhola வகை மீன் சிக்கியது. இதன் மதிப்பு சுமார் ரூ 2.8 கோடியாகும். ஒரு மீன் மட்டும் சராசரியாக 18 கிலோ எடையை கொண்டிருந்த நிலையில் ஒரு கிலோ மீன் ரூ.13 …

The post வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!! appeared first on Website of Alayadivembu.

]]>

இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மீன் வலையில் 121 Telia Bhola வகை மீன் சிக்கியது.

இதன் மதிப்பு சுமார் ரூ 2.8 கோடியாகும். ஒரு மீன் மட்டும் சராசரியாக 18 கிலோ எடையை கொண்டிருந்த நிலையில் ஒரு கிலோ மீன் ரூ.13 ஆயிரத்திற்கு விலை போய் உள்ளது.

கடந்த ஆண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓடிசாவின் ராஜ் நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் வலையில் அரிய வகையான Telia Bhola மீன் சிக்கியது. அப்பொழுது கிலோ ரூ10 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இந்த Telia Bhola ரக மீனை அப்பகுதி மக்கள் மயூரி மீன் என அழைக்கிறார்கள். இந்த மீனின் வயற்றில் உள்ள சில பொருட்கள் மருத்துவ துறையில் சில அரிய நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் தான் இந்த மீனை பல மருத்துவ நிறுவனங்கள் நீயா நானா என்று போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.

The post வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!! appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%ae/feed/ 0
உலக சாதனை படைத்த மின்னல்! https://alayadivembuweb.lk/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d/ https://alayadivembuweb.lk/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d/#respond Tue, 01 Feb 2022 14:55:27 +0000 http://alayadivembuweb.lk/?p=27725 கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரை உள்ள தூரத்திற்கு சமமானது …

The post உலக சாதனை படைத்த மின்னல்! appeared first on Website of Alayadivembu.

]]>

கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரை உள்ள தூரத்திற்கு சமமானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஒக்டோபர் 31ம் திகதியன்று தெற்கு பிரேசில் பகுதியில் பதிவான ஒரு மின்னலின் தூரத்தை விட 60 கிலோமீட்டர்கள் அதிகமாக அமெரிக்க மின்னல் பதிவாகி உள்ளது. இது இயற்கை நிகழ்வுகளின் அசாதாரண பதிவுகள் என ஐ.நா.வானிலை மற்றும் கால நிலை அதிகாரி ராண்டால் செர்வெனி தெரிவித்துள்ளார். மின்னலின் நீளம் மற்றும் கால அளவைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post உலக சாதனை படைத்த மின்னல்! appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆசிய ராணியின் மதிப்பு : கணக்கிடப்பட்டுள்ள பல மில்லியன்கள் டொலர்!! https://alayadivembuweb.lk/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-3/ https://alayadivembuweb.lk/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-3/#respond Sat, 08 Jan 2022 12:59:13 +0000 http://alayadivembuweb.lk/?p=27123 ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 310 கிலோ கிராம் எடை கொண்ட நீலக்கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதியை மதிப்பிட்டுள்ளதாக கல்லின் உரிமையாளர் கூறியுள்ளார். ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது. எனினும் இலங்கை அதிகாரிகளும், அந்த …

The post நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆசிய ராணியின் மதிப்பு : கணக்கிடப்பட்டுள்ள பல மில்லியன்கள் டொலர்!! appeared first on Website of Alayadivembu.

]]>

ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 310 கிலோ கிராம் எடை கொண்ட நீலக்கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதியை மதிப்பிட்டுள்ளதாக கல்லின் உரிமையாளர் கூறியுள்ளார்.

ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது. எனினும் இலங்கை அதிகாரிகளும், அந்த கல்லின் உரிமையாளர்களும் இந்த வாய்ப்பை மறுத்துள்ளனர்.


இந்த நிலையிலேயே பிரான்ஸில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். எனவே தொடர்ந்தும் விலை பேரம் பேசப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆசிய ராணியின் மதிப்பு : கணக்கிடப்பட்டுள்ள பல மில்லியன்கள் டொலர்!! appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-3/feed/ 0
நான்கு காதுகளுடன் பிறந்துள்ள பூனைக் குட்டி! https://alayadivembuweb.lk/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ https://alayadivembuweb.lk/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond Sun, 21 Nov 2021 14:02:03 +0000 http://alayadivembuweb.lk/?p=25810 துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள தாடையுடன் பிறந்துள்ளது. 6 குட்டிகளில் ஒன்றாக பிறந்த  இந்த பூனைக் குட்டியை ஒரு தம்பதி எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த மரபணு குறைபாடு காரணமாக  பூனைக் குட்டிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை எனவும் சாதாரண பூனைகளைப் போலவே நன்றாக காது கேட்கும் எனவும் மருத்துவர்கள் …

The post நான்கு காதுகளுடன் பிறந்துள்ள பூனைக் குட்டி! appeared first on Website of Alayadivembu.

]]>

துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள தாடையுடன் பிறந்துள்ளது.

6 குட்டிகளில் ஒன்றாக பிறந்த  இந்த பூனைக் குட்டியை ஒரு தம்பதி எடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்த மரபணு குறைபாடு காரணமாக  பூனைக் குட்டிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை எனவும் சாதாரண பூனைகளைப் போலவே நன்றாக காது கேட்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், மிடாஸ் பூனைக்குட்டி இணையத்தில் பிரபலமடைந்து வருகின்றது.

The post நான்கு காதுகளுடன் பிறந்துள்ள பூனைக் குட்டி! appeared first on Website of Alayadivembu.

]]>
https://alayadivembuweb.lk/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/ 0