Latest News
Home / விளையாட்டு (page 30)

விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: 14பேர் கொண்ட அணியில் ஒல்லி ரொபின்சனுக்கு வாய்ப்பு

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக, ஒல்லி ரொபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் விளையாடவுள்ள முழுமையான அணி விபரத்தை பார்க்கலாம், ஜோ ரூட் தலைமையிலான அணியில் ஜேம்ஸ் எண்டரசன், ஜொஃப்ரா ஆர்சர், டொமினிக் பெஸ்,ஸ்டூவர்ட் பிராட், ரொறி பர்ன்ஸ், ஜோஸ் …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல் தொடரை நடத்த அதிகாரப்பூர்வ அனுமதி!

ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய உட்துறை, வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகங்களின் அனுமதி தேவை. இந்தநிலையில் மத்திய உட்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மத்திய உட்துறை அமைச்சகம் மற்றும் …

மேலும் வாசிக்க

பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில்  இங்கிலாந்து வீழ்த்தியது. இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ஓட்டங்களை குவித்தது. அதன்பின்னர், துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனால் 107 ஓட்டங்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் தனது 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்தது. எனினும் …

மேலும் வாசிக்க

2021ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு: ஐ.சி.சி. முடிவு

2021ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரை நடத்தும் உரிமம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இணைய வழியுடாக நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 2021ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரை (ஒக்டோபர்-நவம்பர்) திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவது என்றும், ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான 7ஆவது ரி-20 உலகக்கிண்ண தொடரை 2022ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் …

மேலும் வாசிக்க

அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் வெற்றி – தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகள் மோதிய 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கே. மதிவாணன்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பிற்கிணங்க, உப தலைவர்கள் இருவருக்கும் சம்பிரதாயபூர்வமாக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட்டில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் நிகழ்காலத்தில் தமக்கு எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பம்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20 தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னர் அறிவித்தபடி, போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செய்திருந்தது, அதற்கான அனுமதியை இந்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் கோரியது. இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு …

மேலும் வாசிக்க

ஸ்டம்பிங் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய TOP 5 கீப்பர்கள் பட்டியல்!

கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எப்போதும் விழிப்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் பந்தை ஒரு நொடிதான் தவிர விடுவார் தவறவிட்ட உடன் உடனடியாக பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து ஸ்டம்பிங் செய்ய வேண்டும். அப்படி அதிகமாக ஸ்டம்பிங் செய்துள்ள விக்கெட் கீப்பர்கள் பற்றி தற்போது பார்ப்போம். இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்துள்ள …

மேலும் வாசிக்க

ஆண்களுக்கான உலகக்கிண்ண T20 போட்டி ஒத்திவைக்கப்பட்டது

அவுஸ்ரேலியாவில் நடைபெறவிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருப்பது உலகக்கிண்ண தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 7 ஆவது இருபதுக்கு இருப்பது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை அவுஸ்ரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தற்போதைக்கு உலகக்கிண்ண போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என அவுஸ்ரேலியா கிரிக்கெட் சபை வெளிப்படையாக …

மேலும் வாசிக்க

SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார் மஹேல!

SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த கூட்டத்தின் போது இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. கடந்த 12 வருடங்களாக SSC விளையாட்டு கழகத்தின் தலைவராக செயற்பட்ட சமந்த தொடன்வல, கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளை இளம் தலைவர் ஒருவர் முன்னெடுக்க இடமளிக்கும் நோக்கில் பதவியில் இருந்து விலகினார். 1997 இல் கொழும்பு நாலந்தா கல்லூரியில் மாணவராக …

மேலும் வாசிக்க