Latest News
Home / ஆலையடிவேம்பு (page 5)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சமைத்த உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் இன்றைய தினம் (12) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதியான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு ( நெக்கோட் பின்பகுதி ) மக்களுக்கு வெள்ளத்தின் மத்தியிலும் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. உணவு வழங்கும் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02வது நாளாகவும் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் (12) இரண்டாவது நாளாகவும் இரவுநேரத்துக்கான சமைத்த 400 உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று நாவற்காடு ,வாச்சிக்குடா, கோளாவில் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. …

மேலும் வாசிக்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளால் 700 உணவுப் பொதி….

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் இன்றைய தினம் (11) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த 700 உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று – 7,7/2 ,7/3 ,7/4 , நாவற்காடு ,வாச்சிக்குடா, சின்னக்குளம், கோளாவில், ஆலையடிவேம்பு ஆகிய …

மேலும் வாசிக்க

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் அறிவித்தல்…..

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பான அசாதாரண சூழ்நிலை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளில் தங்க முடியாத நிலையில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள குடும்பங்கள் தங்குவதற்கு என ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு பாடசாலையும் மற்றும் அக்கரைப்பற்று 7/4 கலாச்சார மண்டபமும் முகாம்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்திய பின் முகாம்களில் தங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி …

மேலும் வாசிக்க

அம்பாறையின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை! அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பும் உள்ளடக்கம்!

அம்பாறை – இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சேனநாயக்க சமுத்திரத்தின் நீரின் கொள்ளளவு இன்று (10) பிற்பகல் வரை உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொல்வத்தை, பஹலந்த, இறக்காமம், …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தினர் இணைந்து சாதனையாளர்கள் பாராட்டு விழா….

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம், இந்து இளைஞர் மன்றத்தினரால் சாதனையாளர்கள் பாராட்டு விழா மற்றும் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு என்பன நேற்றயதினம் (27) மாலை 3.30 மணியளவில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் திரு.த.கயிலாயபிள்ளை அவர்கள் தலைமையில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது. அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ், …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்ற ஒளிவிழா…

அக்கரைப்பற்று, கமு/திகோ/விவேகானந்தா வித்தயாலயத்தில் நேற்று (22/12/2023) பாடசாலையின் அதிபர் திரு.க.தங்கவடிவேல் தலைமையில் ஒளி விழாவானது பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பானதாக இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் கௌரவிப்பு…..

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 19 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் திரு.க.தங்கவடிவேல் அவர்கள் தலைமையில் கோலாகலமாக பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.இரா.உதயகுமார் (வலயக்கல்வி பணிப்பாளர், திருக்கோவில்) , சிறப்பு விருந்தினராக திருமதி.மா.மயுரன் (கோட்டக்கல்வி பணிப்பாளர், ஆலையடிவேம்பு), திரு.மா.யோகராஜன் (பாடசாலை மேன்பாட்டு இணைப்பாளர்,திருக்கோவில்) மற்றும் கௌரவ …

மேலும் வாசிக்க

திருமூலர் சிலை அம்பாறை மாவட்டம் முழுவதும் சைவத்தமிழ் எழுச்சி ஊர்வலமாக :இன்று அக்கரைப்பற்றில் இருந்து ஆரம்பம்…..

அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருமூலர் திருவிழா எனும் தலைப்பின் கீழ் திருமூலர் சிலை சைவத்தமிழ் எழுச்சி ஊர்வலமாக அம்பாறை மாவட்ட தமிழ் கிராம ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் கொண்டு செல்லும் நிகழ்வு இன்று (22) ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று சுவாமி விபுலாந்த சிறுவர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஊர்வலமானது இன்று ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள், தம்பிலுவில் பிரதேச பாடசாலைகள் மற்றும் திருக்கோவில் பிரதேச பாடசாலைகளை சென்று …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் 32வது பாலர் கலைவிழா….

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் 32வது பாலர் கலைவிழா நிகழ்வு இன்று (21) மாலை 3.00 மணியளவில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் திரு.த.கயிலாயபிள்ளை அவர்கள் தலைமையில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய இயக்குனர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அவர்களின் ஒருங்கிணைப்புடன் கோலாகலமாக இடம்பெற்றது. அதிதிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான …

மேலும் வாசிக்க