Latest News
Home / ஆலையடிவேம்பு (page 42)

ஆலையடிவேம்பு

அறநெறி பாடசாலை மாணவர்களின் வருகையை ஊக்கிவிக்கும் முகமாக ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் வழங்கி வைப்பு…

-கிஷோர், அபிராஜ்- ஆலையடிவேம்பு பிரதேச அறநெறி பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் வருகையை ஊக்கிவிக்கும் முகமாக அறநெறி பாடசாலை மாணவர்களின் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற கட்டிட வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த அறநெறி பாடசாலை மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதி …

மேலும் வாசிக்க

கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலை மாணவர்களின் நலன் கருதி ”சத்தியம்” அமைப்பின் ஊடக மின் அழுத்திகள் வழங்கிவைப்பு….

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் குடும்ப ரீதியில் 21 மாணவர்கள் பயனடையும் விதத்தில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 10 மின் அழுத்திகள் (மின் துணி தேய்ப்புப் பெட்டி) இன்று (27) புதன்கிழமை வழங்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டமானது பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய மாணவர் நலன்கருதி சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயம் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்றும் முன்னெடுப்பு… நாளை எந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி…..

-கிரிசாந் மகாதேவன்- படங்கள்: –ஹரிஸ்- நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களுக்கான covid-19 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (26) ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட அக்கரைப்பற்று இராம கிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்ததுடன் குறித்த …

மேலும் வாசிக்க

பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பம்: ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு. நாளை எந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி…..

-கிரிசாந் மகாதேவன்- படங்கள்- கிஷோர் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களுக்கான covid-19 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது. நாட்டில் பாடசாலைகள் நீண்ட நாட்களின் பின்னர் கடந்த வியாழக்கிழமை (21) ஆம் திகதி முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. முதலில் 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.   அதன் அடிப்படையில் 2 ஆம் கட்டமாக இன்றைய தினம் (25) …

மேலும் வாசிக்க

2021 வருட நவராத்திரிவிழா விஜயதசமி பூசை நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தில் இன்று….

இந்துக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களுள் நவராத்திரி விரதம் முக்கியமானதாகும். சக்தியை நோக்கி 9தினங்கள் விரதமிருந்து அனுஸ்டிக்கும் மகத்தானவிரதம். இவ்விரதம் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 09 தினங்கள் அனுஸ்டிக்கப்பட்டு இன்றைய தினம் விஜயதசமி பூசை நிகழ்வு பல பாகங்களில் இடம்பெற்றது. அந்த வகையில் நவராத்திரிவிழாவின் இறுதிநாள் விஜயதசமி பூசை வழிபாடு நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் இன்றைய தினம் (15.10.2021) மாலை வேளையில் இடம்பெற்றது. இன் நிகழ்வு …

மேலும் வாசிக்க

அமைச்சர் ஹெகலிய அவர்களை கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்திப்பையடுத்து அதிரடிநடவடிக்கை! ஆலையடிவேம்பு மக்கள் விசேட நன்றி தெரிவிப்பு.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்தித்து கலந்துரையாடியதன் பலனாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை 24 மணிநேரமும் இரவுபகலாக இயங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . அமைச்சரைச்சந்தித்து 24 மணிநேரத்துள் அவ்வைத்தியசாலை 24 மணிநேரமும் இயங்கும்வகையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டமையானது அப்பகுதி மக்களை வியப்பில்ஆழ்த்தியுள்ளது . குறித்த சந்திப்பு கடந்த புதன்கிழமை கொழும்பிலுள்ள அமைச்சரது அலுவலகத்தில் நடைபெற்றது . மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாஷ் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று தமிழ் பிரிவு பகுதிகளில் நாளை மின் முற்றாக தடைப்படும்!!!

மின் வழிகளில் பராமரிப்பு வேலை காரணமாக (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை நெசவாலை வீதி, ஆலையடிவேம்பு, கோளாவில், நாவற்காடு, வாச்சிக்குடா வரை உள்ள பகுதிகளில் அவசர திருத்த வேலை காரணமாக மின்சாரம் முற்றாகத் தடைபட்டு இருக்கும் என அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபை மின் அத்யட்சகர் மக்களுக்கு அறியத்தருகின்றார். மேலும் குறித்த பராமரிப்பு வேலைகள் குறிப்பட்ட நேரத்தினை விட முன்னராக முடிவடையும் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி பெருவிழா- 2021 : ஆரம்பம்….

-கபிஷன்- ஈழத்திருநாட்டில் கிழக்கு கரையோர எழில்மிகு அக்கரைப்பற்று பகுதியிலே அமர்ந்து அருளர்பாலித்துக்கொண்டிருக்கின்ற ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி பெருவிழா நிகழாண்டு மங்களம் நிறைந்த பிலவ வருடம் புரட்டாதித் திங்கள் 21ஆம் நாள் (2021.10.07) வியாழக்கிழமை பிரதமைத் நிதியும், சித்திரை நட்சத்திரமும், சித்தாமிர்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.00 மணிக்கு அன்னையின் திருக்கதவு திறக்கும் வைபவம் ஆரம்பமாகி தொடர்ந்து 09 நாட்கள் விழா இடம்பெற …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுப்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான பணியானது பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.டி.எம்.சமந்த திஸ்ஸாநாயக்க அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று-7/4 கிராம சேவகர் பிரிவில் நேற்று (01.10.2021) நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், பிரதேச செயலக கணக்காளர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சமூர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத்திட்டம் 02 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு…

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி பிரிவினால் பிரதேச செயலாளர் திரு. வி.பபாகரன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். வறுமை நிலையினை அடிப்படையாகக் கொண்ட சமூர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அளிக்கம்பை …

மேலும் வாசிக்க