Latest News
Home / ஆலையடிவேம்பு (page 4)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணியில் இணைந்து கொள்ள அழைப்பு….

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.02.2024) காலை 6.00 மணிமுதல் இடம் பெறவுள்ளது. இந்த சிரமதான பணியில் தன்னார்வமாக அனைவரும் கலந்து கொண்டு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றார்கள். ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் குறித்த மயானமானது நீண்டகாலமாக துப்பரவுப் பணிகளும் இடம்பெறாத நிலையில் மரம், …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (09) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. கனகாம்பிகை பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் J.நிரோஜினி, T.குலதர்ஷினி மற்றும் S.சிந்துஜா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற நிகழ்வில் அதிதியக WDC தலைவி J.காந்திமதி கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து …

மேலும் வாசிக்க

2024 ஆம் ஆண்டு உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புக்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலையில்….

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழ் பொறியிலாளர் அமைப்பு இணைந்து ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட 2024 ஆம் ஆண்டு உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (06) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் K.ஜெயந்தன் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் பாடசாலை பழைய …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச பிரிவு வெளிநாடு சென்ற குடும்பங்களுக்கான நிதி முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு: மக்களால் வங்கி கிளை வேண்டி மகஜரும் கையளிப்பு…..

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெளிநாடு சென்ற குடும்பங்களுக்கான நிதி முகாமைத்துவம் தொடர்பான நன்மை மிக்க விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் (27.01.2024) காலை 9.30 மணியளவில் அக்கரைப்பற்று, இலங்கை வங்கி கிளையின் பூரண அனுசரணை மற்றும் ஏற்பாட்டிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பபாகரன் அவர்களின் அவர்களின் வழிகாட்டுதலுடனும், பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் பங்களிப்புடனும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று, …

மேலும் வாசிக்க

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப்பிராத்தனை சபையின் தைப்பொங்கல் விழா….

உழவர்களின் திருநாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2024ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தைப்பொங்கல் விழா வழமை போல் இவ்வருடமும் கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப்பிராத்தனை சபையினரின் தலைமையில் கோளாவில் விநாயகர் அறநெறிப்பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளுடனும் போட்டிகளுடனும் …

மேலும் வாசிக்க

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…

ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதி பங்களிப்பில் அம்பாரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி) தலைமையில் நேற்று (18) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண (அரிசி) பொதிகள் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இணைந்து பல குடும்பங்களுக்கான அரிசி பொதிகள் வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

கோளாவில் பெருநாவலர் வித்தியாலய தரம் 05 மாணவர்களுக்கு புலமைத்தேர்வு புத்தகம் வழங்கல் நிகழ்வு…..

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 05 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக அவர்களுக்கு புலமைத்தேர்வு எனும் புத்தகம் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் இன்று (18) மாலை 3.30 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் அதிதியாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் பியசேன கிருத்திகன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் பொங்கல் விழா….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2024ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை கடந்த 15ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 2024ஆம் வருடத்திற்கான பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் இன்று (16/01/2024)  காலை 10.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.பெ.தணிகாசலம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. மேலும் நிகழ்வில் இந்துமாமன்றத்தின் பொருளாளர், …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து 03வது நாளாகவும் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….

அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் (13) தொடர்ந்தும் மூன்றாவது நாளாகவும் சமைத்த 600 உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று நாவற்காடு, கோளாவில் மற்றும் திராய்கேனி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உணவுப்பொதிகள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினர் லண்டனை சேர்ந்த கல்யாணசுந்தரம் நித்தியானந்தன் நிதிப் பங்களிப்புடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு வேளைக்கான 400 உணவுப்பொதி…

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் நேற்றய தினம் (12) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது மேலும் இரவு வேலைக்கான 400 உணவுப்பொதிகளும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதியான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு ( நெக்கோட் பின்பகுதி), ஆலையடிவேம்பு இத்தியடி முன்பகுதி மற்றும் அக்கரைப்பற்று 7/2 …

மேலும் வாசிக்க