ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (30.08.2022) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி (31.08.2022) காலை திருக்கொடியேற்றப் பெருவிழா இடம்பெற்றது இதனை தொடர்ந்து இன்று (02.09.2022) திரு வே.சுதாகரன் போடியார் குடும்பத்தினரால் மூன்றாம் நாளுக்கான சதுர்வேத திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது.
மேலும் வாசிக்கஉயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி ல.பிரேம்சனா அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு Alayadivembuweb.lk இணையக்குழுவினரின் ஏற்பாட்டில்….
Alayadivembuweb.lk இணையக்குழுவினரின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச பனங்காட்டை பிறப்பிடமாக கொண்ட க.பொ.த உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி லவன் பிரேம்சனா அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு நேற்று (02.09.2022) மாலை சாதனை மாணவி ல.பிரேம்சனா அவர்கள் இல்லத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் திகோ/புனித சவேரியார் வித்தியாலய அதிபர், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற செயலாளர் ஶ்ரீ.மணிவண்ணன் மற்றும் இயன் மருத்துவர் க.ஹரன்ராஜ் அவர்களும் கலந்து …
மேலும் வாசிக்கஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா கொடியேற்ற நிகழ்வு…
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா நேற்று (30.08.2022) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இன்று (31.08.2022) காலை 10.30 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.வே.சிவசம்பு வட்டவிதானை குடும்பத்தினர் பங்களிப்புடன் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ யோ.கு.சுமிதகணபதி ஐயர் என்பவர்களால் முதலாம் நாள் திருவிழாவின் காலை …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருஊர்வலம் பக்தி பூர்வமாக பக்த அடியார்கள் பங்குபற்றலுடன்……
அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 9ம் நாள் இன்று (30) திருஊர்வலம் பக்தி பூர்வமாக பக்த அடியார்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றுவருகின்றது. இலங்கைத்திருநாட்டின் கிழக்கே தென்பால் செந்நெல்விளைகின்ற செழிப்பான வயல் நிலங்களும் சைவநெறி நின்று தமிழ் வளர்க்கும் மக்களும் வாழும் சைவப்பழம்பெரும் அழகு நிறை அக்கரைப்பற்றில் மருதடி நிழலில் …
மேலும் வாசிக்ககமு/திகோ/பாசுபதேசுவர் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கமு/திகோ/பாசுபதேசுவர் வித்தியாலய பாடசாலை 30 மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக இன்று (30) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வின் இணைந்த கரங்கள் அமைப்பினர், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.
மேலும் வாசிக்கவிநாய சதுர்தி விழா ஹிந்துஸ்வயம் சேவகசங்க ஏற்பாட்டில் ஆலையடிவேம்பில் விபுலானந்தா சிறுவர் இல்லம், மற்றும் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றலுடன்
விநாய சதுர்தி விழா ஹிந்துஸ்வயம் சேவகசங்க ஏற்பாட்டில் ஆலையடிவேம்பில் விபுலானந்தா சிறுவர் இல்லம், மற்றும் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றலுடன் கடந்த (28) அன்று இடம்பெற்றது. விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் இருந்து விநாயகர் ரத ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடினைத்தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் கதை, பேச்சு என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து நற்சிந்தனையும் இடம்பெற்றது மேலும் இன் நிகழ்வில் விபுலானந்தா …
மேலும் வாசிக்கஅருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழாவின் பாரம்பரிய கலை கலாசார நடன ஊர்வலத்துடன் கோலாகலமாக இடம்பெற்ற 7ம் நாள் திருவிழா……
அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழாவின் 07ம் நாள் திருவிழாவான பாரம்பரிய கலை கலாசார நடன ஊர்வலங்கள் என்பனவற்றுடன் கோலாகலமாக நேற்று (28) பக்தி பூர்வமாக பெரும் திரளான பக்த அடியார்கள் சூழ சிறந்த முறையில் இடம்பெற்றது. கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய விநாயகப்பெருமானின் இவ்வருட …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் கோலாகலமாக இடம்பெற்ற 07ம் நாள் வேட்டை திருவிழா……
அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான வேட்டை திருவிழா நேற்று (28) பக்தி பூர்வமாக பக்த அடியார்கள் சூழ சிறந்த முறையில் இடம்பெற்றது. இலங்கைத்திருநாட்டின் கிழக்கே தென்பால் செந்நெல்விளைகின்ற செழிப்பான வயல் நிலங்களும் சைவநெறி நின்று தமிழ் வளர்க்கும் மக்களும் வாழும் சைவப்பழம்பெரும் அழகு …
மேலும் வாசிக்கஅக்கரைப்பற்று 08ம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சுற்றுசூழல் பகுதி சுத்தம் செய்யும் சிரமதான பணி இன்று முன்னெடுப்பு….
நன்றி -பார்த்திபன் சுந்தரவடிவேல் – ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பகுதிக்கு உட்பட்ட அக்கரைப்பற்று-08ம் கிராம அபிவிருத்தி சங்கத்தால் (R.D.S) இன்று (28.08.2022) ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியின் சுற்றுசூழல் பகுதி சுத்தம் செய்யும் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டு வருகின்ற நிலைகளிலும், நாடளாவிய ரீதியில் மழைப்பொழிவு காணப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த சிரமதானப்பணியானது மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும் இதுபோன்று ஆலையடிவேம்பு பிரதேசங்களின் ஏனைய …
மேலும் வாசிக்கஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் சக்தி Super Star புகழ் சபேசன் கலந்து கலக்கும் ஆராதனாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி அக்கரைப்பற்றில் விரைவில்!
அக்கரைப்பற்று ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் சக்தி Super Star புகழ் சபேசன் கலந்து கலக்கும் ஆராதனாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி 2022 செப்டம்பர் 2ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்திற்கு அனைவரையும் அழைக்கின்றோம். இந்த இன்னிசை நிகழ்ச்சிக்கான ஊடக அனுசரணையினை Alayaidivembuweb.lk இணையத்தளம் வழங்குகின்றது. டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முந்திக்கொள்ளுங்கள். டிக்கெட் கிடைக்கப்பெறும் இடங்கள் 1. அன்பு ஸ்டோர், பிரதான …
மேலும் வாசிக்க