Latest News
Home / ஆலையடிவேம்பு (page 24)

ஆலையடிவேம்பு

திருநாவுக்கரசு வித்தியாலய நீர்வசதி மேம்படுத்தும் திட்டம் “சத்தியம்” அமைப்பின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கிவைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/ திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலையில் நீர் வசதியினை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக புதிய நீர் ஏற்றும் இயந்திரம், புதிய குழாய் இணைப்பு வசதி செயற்பாடுகள் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு நேற்றய தினம் (06.12.2022) மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலையில் நீர் வசதியினை மேம்படுத்தும் திட்ட செயற்பாட்டை முன்னெடுக்க பாடசாலையின் அதிபர் சுரேஸ் ஸ்டீபன்சன் அவர்களினால் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு சஜிராஜ் நடா அவர்களின் நான்காம் கட்ட மனிதாபிமான பணி…

ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு தற்போது காணப்படுகின்ற இக்கட்டான பொருளாதார சூழ்நிலையை வெற்றி கொள்ளும் முகமாக நெல் அவித்தல் மற்றும் இடியாப்பம், புட்டு, இட்லி அவித்து வீட்டு கைத்தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கான சகலவிதமான மூலப் பொருட்களையும் மனிதாபிமான செயற்பாட்டாளர் திரு.கார்த்திகேசு யோகநாதன் அவர்களின் தலைமையில் இன்று (07.12.2022) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த மனிதாபிமான செயற்பாடானது கனடா நாட்டில் வசிக்கும் திரு …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற YOUNG FIGHTERS மற்றும் YOUNG WARRIOR ஆகிய அணியினருக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் YOUNG WARRIOR அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடி இத் தொடரில் 1ம் இடத்தை …

மேலும் வாசிக்க

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா மறுசீரமைக்கப்பட்டு அங்குராப்பண நிகழ்வு…

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா முழுவதுமாக புதுப்பொலிவுடன் மறுசீரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக வழங்கும் அங்குராப்பண நிகழ்வு இன்று (25.11.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. இந்த சிறுவர் பூங்கா மறுசீரமைப்பிற்கு சத்தியமூர்த்தி “சத்தியம் “ வாழும் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிகிராம இந்து மயானத்தில் மாபெரும் சிரமானப்பணி…….

-ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பல்வேறு சமய சமூக பணிகளை அண்மைக்காலத்தில் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (25.11.2022) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிகிராம இந்து மயானத்தில் மாபெரும் சிரமானப்பணியினை ஏற்பாடு செய்து முன்னெடுத்தனர். அமைப்பின் தலைவர் க.சுந்தலிங்கம் தலைமையில் அமைப்பின் ஆலேசாகரும் ஓய்வு பெற்ற அம்பாரை மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற சிரமதானப்பணியில் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். குறித்த …

மேலும் வாசிக்க

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்திற்கு “கைகொடுப்போம் அறக்கட்டளை” அனுசரணையில் CCTV இணைப்பினை நிறுவி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திருமதி.உ.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக “கைகொடுப்போம் அறக்கட்டளை” அவர்களின் பூரண அனுசரணையில் பாடசாலை பகுதியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக CCTV இணைப்பினை நிறுவி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு (2022.11.22) இன்று செய்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. அண்மைக்காலமாக பாடசாலைகளில் மாணவர்களின் எதிர்காலத்தினை சவாலுக்குட்படுத்தியதாக சிறுவர் துஸ்பிரயோகங்கள், போதைவஸ்து தாக்கங்கள், பிறழ்வான நடத்தைகள் போன்ற சில சம்பவங்கள் இடம் பெற்று வருவதினை …

மேலும் வாசிக்க

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் மறுசீரமைப்பு…

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா முழுவதுமாக புதுப்பொலிவுடன் மறுசீரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்கா மறுசீரமைப்பிற்கு சத்தியமூர்த்தி “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் அவர்கள் காரணமாக இருப்பதுடன் இவரின் தொடர் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு…

யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று (18.11.2022) வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் கழகத்தின் தலைவர் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று, ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இன் நிகழ்வுக்கு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் V.பாபகரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் T. த.கிறோஜாதரன், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், பிரதேச கிராம நிலத்தாரி என பலர் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் பேராதரவில், ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் கௌரவிப்பு நிகழ்வும்….

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் பேராதரவில், ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (19/11/2022) சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் தாராளர் இறைபணிச் செம்மல் த.கயிலாயபிள்ளை J.P (ஸ்தாபகர், தலைவர் இந்து இளைஞர் மன்றம், சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம், அக்கரைப்பற்று) மற்றும் தலைவர் திரு கே.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர், ஆலோசகர் உளவளத்துறை ஆலோசனை மையம் மட்டக்களப்பு) …

மேலும் வாசிக்க

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் திருக்கோவில் வலயக்கல்வி பகுதிற்கு உற்பட்ட புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் இலவசமாக வழங்கி வைப்பு….

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் – 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் பி. பரமதயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களும், இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் அவர்களும் கலந்து கொண்டு, திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 38 பாடசாலைகளைச் …

மேலும் வாசிக்க