Latest News
Home / விளையாட்டு / வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் – சங்கக்கார நம்பிக்கை!

வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் – சங்கக்கார நம்பிக்கை!

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இலங்கையின் இளம் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் அளித்த ஆதரவிற்காக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார பாராட்டு தெரிவித்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் லைக்காவின் ஜப்னா கிங்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய விஜயகாந்த் வியாஸ்காந்த், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளர்களாக உள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து விஜயகாந்த் வியாஸ்காந்த், விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.

இளம் கிரிக்கெட் வீரரான விஜஸ்காந்த் சிறப்பாக பந்துவீசியதாகவும், அவர் பல விடயங்களை இதன்போது கற்றுக்கொண்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் என தான் நம்புவதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்கக்கார செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *