Latest News
Home / சுவாரசியம் / வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!!

வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!!

இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மீன் வலையில் 121 Telia Bhola வகை மீன் சிக்கியது.

இதன் மதிப்பு சுமார் ரூ 2.8 கோடியாகும். ஒரு மீன் மட்டும் சராசரியாக 18 கிலோ எடையை கொண்டிருந்த நிலையில் ஒரு கிலோ மீன் ரூ.13 ஆயிரத்திற்கு விலை போய் உள்ளது.

கடந்த ஆண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓடிசாவின் ராஜ் நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் வலையில் அரிய வகையான Telia Bhola மீன் சிக்கியது. அப்பொழுது கிலோ ரூ10 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இந்த Telia Bhola ரக மீனை அப்பகுதி மக்கள் மயூரி மீன் என அழைக்கிறார்கள். இந்த மீனின் வயற்றில் உள்ள சில பொருட்கள் மருத்துவ துறையில் சில அரிய நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் தான் இந்த மீனை பல மருத்துவ நிறுவனங்கள் நீயா நானா என்று போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.

Check Also

உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *