யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் புதிய நியமனத்தில் முறைகேடு நிலவுவதாகத் தெரிவித்து சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்களால் இந்த சுழற்சிமுறை உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக முன்றலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்விசாரா ஊழியர்களின் பதவி வெற்றிடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் அனுப்பிவைக்கப்பட்ட பெயர்ப் பட்டியல், உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், நியமனத்தில் தங்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.