அக்கரைப்பற்று 7ஜ சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் மானாகப்போடி லோகநாதன் கொழும்பில் நேற்று(21) காலமானார்.
அன்னார் மானாகப்போடி சீதாலெட்சுமியின் பாசமிகு சிரேஸ்ட புதல்வரும் ரெட்ணசிங்கம் அமிர்தரெத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் தேவமனோகரியின் அன்புக்கணவரும் ரம்மியா என அழைக்கப்படும் ரமணியா (ஹட்டன் நெஷனல் வங்கி கொழும்பு) அவர்களின் பாசமிகு தந்தையும் யோகேஸ்வரி, ராஜநாதன் (ஓய்வு பெற்ற நீதிமன்ற பதிவாளர் மட்டக்களப்பு) ரகுநாதன் ( லண்டன்) கமலேஸ்வரி (ஓய்வு பெற்ற அதிபர் இராமகிருஸ்ண தேசிய பாடசாலை அக்கரைப்பற்று) தர்மேஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் புஸ்பா, கமலா (அவுஸ்திரேலியா) கோணேஸ் (மலேசியா) ரஞ்சினி (லண்டன்) இரட்ணஜோதி (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி கிரியைகளுக்காக கொழும்பு பொரளை ஜெயரெட்னா மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பொரளை கனத்த மயானத்தில் 23 பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.