Latest News
Home / இலங்கை / மக்கள் எது தேவை என கருதுகின்றார்களோ அதுவே அரசியல்: தாண்டியடி பிரதேசத்தில் டாக்டர் இரா. சயனொளிபவன்

மக்கள் எது தேவை என கருதுகின்றார்களோ அதுவே அரசியல்: தாண்டியடி பிரதேசத்தில் டாக்டர் இரா. சயனொளிபவன்

வி.சுகிர்தகுமார்

 
மக்கள் எது தேவை என கருதுகின்றார்களோ அதுவே அரசியல் என தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் இரா.சயனொளிபவன்.

தாண்டியடி பிரதேசத்தில்  இடம்பெற்ற  மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அப் பிரதேசத்தின் பெண்கள், பெரியோர்கள், தாய்மார்கள் மற்றும் சமூக நல சேவையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த இரா.சயனொளிப்பவன், திகாமடுல்ல மாவட்டத்தில் இன்னும் குறிப்பிட்ட சில இடங்களே அபிவிருத்தி செய்வதற்கு இருக்கின்றது. நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் நிட்சயம் குறிப்பிட்ட சில வருடங்களில் நம்முடைய பிரதேசத்துக்கு ஏற்றவகையில் அபிவிருத்தியை கொண்டு வருவதற்கான திடமான திட்டங்கள் தன்னிடம் உள்ளதாக கருத்து தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், தாண்டியடி பிரதேசத்தை குறித்து தனக்கு நன்றாக தெரியும் இங்குள்ள பாடசாலையோடு கூட தனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், கல்வி முன்னேற்றகர செயற்பாட்டிற்கு தான் அளப்பெரும்  பங்களிப்பு வழங்கி உள்ளதாகவும்  தனது கருத்தினில்  தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அப் பிரதேச மக்கள், இவரைக்குறித்தும், இவருடைய சேவைகள் குறித்தும்  தங்களுக்கு நன்றாக தெரியும் என்பதுடன்   அவர்களுடைய தாண்டியடி பிரதேச கல்வி வளர்ச்சிக்காக அருபாடுபட்ட நபர்களில் ஒருவர் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இதனடிப்படையில் தங்களுடைய பூரண ஆதரவினை எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தாங்கள் Dr.சயனொளிப்பவனுக்கு அளிப்பதாக தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.

 

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *