Latest News
Home / இலங்கை / புலமைப் பரீசில் பரீட்சை – புதிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி

புலமைப் பரீசில் பரீட்சை – புதிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி

இந்த வருடம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை 2021 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிக்கை ஒன்றை விடுத்து கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான விண்ணப்பங்களையும் ஆலோசனை பத்திரங்களையும் பாடசாலைகளின் அதிபர்களிடம் இருந்து பெற்றோர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளின் அதிபரிம் கையளிக்க வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு நாட்டில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை தத்தமது பாடசாலைகளுக்கே பெற்றுக்கொள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி வலய கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களை நாடுமாறும் கல்வியமைச்சு கேட்டுள்ளது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *