Latest News
Home / ஆலையடிவேம்பு / பிரதேச செயலாளர் தலைமையில் வெள்ளம் வடிந்தோட செய்யும் பொறிமுறைகள் தொடர்பில் இன்று ஆராய்வு….

பிரதேச செயலாளர் தலைமையில் வெள்ளம் வடிந்தோட செய்யும் பொறிமுறைகள் தொடர்பில் இன்று ஆராய்வு….

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்தமழை பெய்த நிலையில் இன்னும் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

இதனால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ்நிலங்கள் மூழ்கியுள்ள நிலையில்; வெள்ள நிலை கட்டுப்படுத்த வேண்டிய தேவைப்பாடும் உருவாகி வருகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரனின் ஒத்துழைப்போடு பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரதேசத்தில் உள்ள வெள்ளம் வடிந்தோடும் பல்வேறு வடிகான்கள் துப்பரவு செய்யும் பணிகள் பிரதேச சபை ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றன.

இதேநேரம் சின்னமுகத்துவார ஆற்றுமுகப்பிரதேசம் சில நாட்களுக்கு முன் அகழ்ந்துவிடப்பட்டள்ள நிலையில் வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்களை பார்வையிட்ட பிரதேச செயலாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள் அதனை வடிந்தோட செய்யும் பொறிமுறைகள் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர்.

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *