பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம இந்து சமய விவகாரங்ஆலோசகராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குறித்த இருவரும் இன்று அலரி மாளிகையில் பிரதமரிடம் தங்களது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.