Latest News
Home / இலங்கை / பாணமை கிராமத்தில் சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் அடிக்கல் வைத்தல் நிகழ்வு

பாணமை கிராமத்தில் சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் அடிக்கல் வைத்தல் நிகழ்வு

சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது வீடின்றி ஓலைக் குடிசைகளில் அதிகளவான அங்கத்தவர்களுடன் வசித்து வரும் குடும்பங்களுக்கு வீடமைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் லவ்கலை பிரதேச செயலக பிரிவில் பாணமை கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு தலா மூன்றரை இலட்சம் (Rs.350,000/-) பெறுமதியில் இரு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதற்கான நிதி அனுசரணையை இலண்டனில் வசிக்கும் திரு.ரி.பாலேந்திரா அவர்கள் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் சிவனருள் பவுண்டேசன் தலைவர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா, செயலாளர் திரு.வே.வாமதேவன், பொருளாளர் திரு.க.ஜனார்த்தனன் செயற்றிட்ட ஆலோசகர்கள் திரு.க.தயாபரன், திரு.க.கணேசன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *